திருக்கழிப்பாலை ஸ்ரீ பால்வண்ண நாதர் திருக்கோயில் – சிவபுரி பைரவர் கோயில்​

திருக்கழிப்பாலை ஸ்ரீ பால்வண்ண நாதர் திருக்கோயில் - சிவபுரி பைரவர் கோயில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிவபுரி எனும் ஊரில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் நான்காவது தலமாக விளங்குகிறது. இறைவனின் பெயர் பால்வண்ண நாதர், இறைவியின் பெயர் வேதநாயகி. இத்தலத்தின் தலவிருச்சம் வில்வம், தலதீர்த்தம் கொள்ளிடம்.கொள்ளிட நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் தேவார காலத்து பழைய ஆலயம் அடித்துச் செல்லப்பட்டதால்...