திருச்சிற்றம்பலம் வாசி தீரவே, காசு நல்குவீர்மாசின் மிழலையீர், ஏச லில்லையே இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்கறைகொள் காசினை, முறைமை நல்குமே. செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்பைகொள் அரவினீர், உய்ய நல்குமே. நீறு பூசினீர், ஏற தேறினீர்கூறு மிழலையீர், பேறும் அருளுமே. காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்நாம மிழலையீர், சேமம் நல்குமே. பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர்அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே. மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே. அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர்பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே. அயனும்...

