சாய்ந்தாடு முருகே சாய்ந்தாடு

சாய்ந்தாடு முருகே சாய்ந்தாடு பாடலை  கேட்க, 

Listen to the Song by Clicking on Play Button! 👇

0:00 / 0:00
சாய்ந்தாடு முருகே சாய்ந்தாடு

சாய்ந்தாடு முருகே சாய்ந்தாடு - பாடல் வரிகள்

வேல் வேல் முருகா வேல்முருகா 

வேல் வேல் முருகா வேல்முருகா 

வேல் வேல் முருகா வேல்முருகா 

வேல் வேல் முருகா வேல்முருகா 

சாய்ந்தாடு முருகே சாய்ந்தாடு

சந்தன குடமே சாய்ந்தாடு!

கோல மயிலே சாய்ந்தாடு

கொஞ்சும் புறாவே சாய்ந்தாடு!

நெற்றியில் பிறந்த நித்திலமே 

நீரினில் வளர்ந்த சித்திரமே 

சுற்றிச்சுற்றி வருகின்றோம் 

சுந்தர மயிலே சாய்ந்தாடு!! 

கார்த்திகைப் பெண்கள் பாலூட்ட 

கன்னித் தமிழால் தாலாட்ட 

கீர்த்தி மிகவும் கொண்டவனே 

சித்திரைநிலவே  சாய்ந்தாடு!! 

பிரணவப் பொருளை அறிந்தவனே! 

ப்ரம்மனை திருத்தும் பேரறிவே! 

சரவணப்பொய்கை வாழ்பவனே 

சண்முக சிவனே சாய்ந்தாடு!! 

தந்தைக்கு மந்திரம் சொன்னவனே! 

தாயாய் அன்பைப் பொழிபவனே 

மந்திரப் பொருளே மரகதமே 

மடி மேல் ஏறி சாய்ந்தாடு!! 

அண்ணன் வயிறோ பெரிதாகும் 

அவனே கனியை உண்ணட்டும் 

பின்னால் உனக்கு உதவிடுவான் 

பொன்னே மணியே சாய்ந்தாடு!! 

வெண்ணை தருவான் மாமனுமே! 

வேலைத்தருவாள் அன்னையுமே! 

பண்பைப் தருவான் அப்பனுமே 

பாடல் தருவோம் நாங்களுமே 

சிட்டே சிமிழே முருகையா 

செந்தூர் வாழும் கந்தையா!! 

எட்டுக்குடியின் வேலய்யா ஏரகத் 

துரையே சாய்ந்தாடு!! 

அன்பும் பண்பும் வளர்ந்திடவும் 

ஆணவம் பொய்யும் நீங்கிடவும் 

இன்பம் உலகில் நிலைத்திடவும் 

இடைக்கழி முருகா சாய்ந்தாடு!!

வேல் வேல் முருகா வேல்முருகா 

வேல் வேல் முருகா வேல்முருகா 

வேல் வேல் முருகா வேல்முருகா 

வேல் வேல் முருகா வேல்முருகா 

SHARE:

Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
Share on linkedin
Share on email