அடி மீது அடி வைத்து அழகான நடை வைத்து – பாடல் வரிகள்
அடி மீது அடி வைத்து
அழகான நடை வைத்து
விளையாட ஓடி வா முருகா!
என்னோடு சேர வா முருகா!!
உன்னோடு சாய்ந்தாட உடலிங்கு தள்ளாட
உயிர் மெல்ல ஏங்குதே குமரா
உனைக் காணும் ஆசைதான் குறைவா?
கண்ணோடு ஒளியில்லை வழிகாட்ட வாவா
என்மூச்சும் எனதில்லை உனக்காக தேவா
விரைவாய் வருவாய் அழகா!
விளையாட ஓடி வா முருகா!!